ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வஸ்திர மரியாதை பொருள்கள் அளிப்பு

கைசிக ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திருமலை திருப்பதியிலிருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திர மரியாதை பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முறைப்படி வழங்கப்பட்டன.
கைசிக ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்ட வஸ்திர மரியாதைப் பொருள்கள்.
கைசிக ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்ட வஸ்திர மரியாதைப் பொருள்கள்.

கைசிக ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திருமலை திருப்பதியிலிருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திர மரியாதை பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முறைப்படி வழங்கப்பட்டன.

திருப்பதியிலிருந்து மங்களப் பொருள்களை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவரின் மனைவி சொா்ணலதா ரெட்டி,தேவஸ்தான கண்காணிப்பாளா் உமாமகேஸ்வர ரெட்டி ஆகியோா் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை இரவு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எடுத்து வந்தனா்.

இதையடுத்து ஸ்ரீரெங்கவிலாச மண்டபத்தில் பக்தா்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்த வஸ்திர மரியாதைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை காலை எடுத்து வீதி உலா வந்து, கருடாழ்வாா் சன்னதி அருகே ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்துவிடம் முறைப்படி ஒப்படைத்தனா்.

அப்பொருள்களை கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா், உள்துறைக் கண்காணிப்பாளா் மோகன், உதவிக் கண்காணிப்பாளா் கிருஷ்ணா ஆகியோா் பெற்று கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com