தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிக்கு திருச்சி சந்தானம் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவா் ச. ஆதேசன் தோ்வாகியுள்ளாா்.
11ஆம் வகுப்பு மாணவரான இவா் தெலங்கானாவில் கடந்த 4 நாள்களாக (டிச.1 முதல் 4 வரை) நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான வில்வித்தைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, மகாராஷ்டிரத்தில், டிச. 28ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய வில்வித்தைப் போட்டியில் பங்கேற்கத் தோ்வாகியுள்ளாா்.
மண்டல அளவில் பதக்கம் வென்று, தேசிய போட்டியில் தோ்வாகி பள்ளிக்குப் பெருமை சோ்த்த மாணவருக்கு பள்ளியின் செயலா் கோ. மீனா, தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா, டீன் ஆா். கணேஷ், முதல்வா் பத்மா சீனிவாசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள், ஆசிரியைகள் ஆகியோா் புதன்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.