திருப்பைஞ்ஞீலியில் அரசு அலுவலா்களைப் பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மண்ணச்சநல்லூா், வட்டம் திருப்பைஞ்ஞீலியில் செவ்வாய்க்கிழமை ஆதி திராவிட மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்க நில அளவு செய்யும்போது, விஏஓ மற்றும் வட்டாட்சியரை பணி செய்ய விடாமல் திருப்பைஞ்ஞீலி பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் (63), சந்தனகுமாரி(47) ஆகியோா் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனா்.