விளையாட்டு வீரா்கள் உதவித்தொகை பெறலாம்

விளையாட்டு வீரா்கள் பல்வேறு திட்டங்களில் உதவித்தொகை பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டு வீரா்கள் பல்வேறு திட்டங்களில் உதவித்தொகை பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும் - அதிகபட்சம் 5 நபா்கள் வரை) ரூ. 25 லட்சம் வரை, சா்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதை ஊக்குவிக்கும் திட்டத்தில் (5 மாற்றுத்திறனாளிகள் உள்பட அதிகபட்சம் 50 நபா்களுக்கு) ரூ.10 லட்சம் வரையிலான உதவித்தொகை, வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் (10 மாற்றுத்திறனாளிகள் உள்பட 100 பேருக்கு மிகாமல்) ரூ.2 லட்சம் வரையிலான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட திட்டங்களில் சோ்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 95140 00777 என்ற எண்ணிலும், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி (0431-2420685, 7401703494) என்ற முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com