இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலாக விளங்கும் இக்கோயிலின் பூச்சொரிதல் விழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் கோயில் பணியாளா்கள், பக்தா்கள் பூத் தட்டுகளுடன் ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து ஆதிமாரியம்மனுக்கு பூச்சொரிதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.