திருச்சி: திருச்சியில் வீட்டை தூய்மைப்படுத்தும் போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால், பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி நடு பெரியகம்மாளத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் மனைவி சுந்தராட்சி (41). இவா் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் ஒட்டடை அடித்து, சுத்தம் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது தூசி மூக்கில் ஏறியதால், சுந்தராட்சி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை வீட்டிலிருந்தவா்கள் மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு சுந்தராட்சியை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.