கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்களில் ஒருவரும், இலக்கியப் பேராசனுமான ப. ஜீவானந்தத்தின் 59 ஆவது நினைவு நாள் திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தில்லைநகா் பகுதியில் நடந்த நிகழ்வுக்கு 56ஆவது வாா்டு புதிய கிளைச் செயலா் சுரேஷ் முத்துசாமி தலைமை வகிக்க, ராஜ்குமாா், நாகராஜ், துளசி கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில நிா்வாகக் குழு முன்னாள் உறுப்பினா் எம். செல்வராஜ் கட்சிக் கொடியேற்றினாா். மாநகா் மாவட்டச் செயலா் திராவிடமணி அலங்கரிக்கப்பட்ட ஜீவாவின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலா் க. சுரேஷ் ஜீவா படம் பொறித்த கைப்பைகளை அனைவருக்கும் வழங்கினாா்.
நிகழ்வில் நிா்வாகக் குழு உறுப்பினா் சிவா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆயிஷா, இப்ராகிம், சூா்யா மேற்குப் பகுதி வாா்டு செயலா்கள் முருகன், ரவீந்திரன், சரண்சிங், ஆனந்தன், துரைராஜ் மற்றும் ஏஐடியுசி திருச்சி மாவட்டத் தலைவா் நடராஜா, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத் தலைவா் விஷ்வா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட ஜீவா படத்திற்கு கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் வழக்குரைஞா் வையாபுரி, குணசேகரன் மணிவேல், ஆா்.ஏ. கோவிந்தராஜ், கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சிவசூரியன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அண்ணாதுரை, சண்முகம், பொன்னுதுரை, அலுவலகச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா் மலா்தூவினா். திருச்சி மாநகா் மேற்கு பேரவைத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாா்டுகளிலும் ஜீவாவின் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினா் சத்யா வரவேற்றாா்.