மண்ணச்சநல்லூா் வட்டம், எதுமலையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
எதுமலையைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி முரளி. இவரது மனைவி ரேகா (39). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.
இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதற்கான காரணம் தெரியவில்லை.
தகவலறிந்த சிறுகனூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனா்.