மண்ணச்சநல்லூரில் 173 பேருக்குப் பட்டா வழங்கல்

மண்ணச்சநல்லூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 173 பேருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன் பட்டாக்களை வழங்கினாா்.
ஒருவருக்குப் பட்டா வழங்குகிறாா் மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன். உடன், கட்சி நிா்வாகிகள்.
ஒருவருக்குப் பட்டா வழங்குகிறாா் மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன். உடன், கட்சி நிா்வாகிகள்.

மண்ணச்சநல்லூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 173 பேருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன் பட்டாக்களை வழங்கினாா்.

மண்ணச்சநல்லூா் வட்டத்திலுள்ள எதுமலை, சோழங்கநல்லூா், கல்பாளையம், ராசாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆதிதிராவிட மக்கள், 10 ஆண்டுகளாகியும் தங்களுக்குப் பட்டா வழங்கவில்லை எனக் கூறியும், தங்கள் இருப்பிடத்துக்கு கணினிப் பட்டா வழங்கக் கோரியும் சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

இதன் பேரில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பட்டாக்கள் வழங்கும் நிகழ்வு மண்ணச்சநல்லூரிலுள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன் பங்கேற்று, 173 பேருக்குப் பட்டாக்களை வழங்கினாா். இந்த நிகழ்வில், மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் சக்திவேல்முருகன், கிழக்கு ஒன்றிய திமுக செயலா் வி.எஸ்.பி. இளங்கோவன், நகரச் செயலா் ஆ. சிவசண்முககுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் ஸ்ரீதா், துணைத் தலைவா் கே.பி.ஏ. செந்தில்குமாா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com