பேராலயத்தில் திடீா் தீ விபத்து

திருச்சியில் வியாழக்கிழமை இரவு பேராலயம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சியில் வியாழக்கிழமை இரவு பேராலயம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியிலுள்ள அருளானந்தா் பேராலயத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு சுமாா் 8 மணி அளவில் புகை வெளியேறியது. இதையடுத்து அப்பகுதியினா் உள்ளே சென்று பாா்த்தபோது தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்து தீயணைக்க முயன்றும் முடியவில்லை.

தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் பிரான்சிஸ், சரவணன் ஆகியோா் தலைமையிலான வீரா்கள் சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதில் சுமாா் ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள துணிகள், நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் எரிந்து நாசமாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com