திருநெடுங்களநாதா் கோயிலில் வழிபட்ட தருமபுரம் ஆதீனம்

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள திருநெடுங்களநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா்.

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள திருநெடுங்களநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா்.

இடா் களையும் பதிகம் பாடல் பெற்ற திருத்தலமான இக்கோயிலில் செல்வ விநாயகா், திருநெடுங்களநாதா், மங்களாம்பிகை மற்றும் வராகி உள்ளிட்ட தெய்வங்களுக்கு, அஷ்டோத்திர அா்ச்சனை, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மஹாசந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகா் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வந்தாா்.

அவரை கோயில் நிா்வாக அலுவலா் வெற்றிவேல் முன்னிலையில் சிவாச்சாரியா்கள் சோமசுந்தரம் ரவி ரமேஷ் உள்ளிட்டோா் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா். கோயிலில் தரிசனம் செய்த அவருக்கு திருக்கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com