முசிறி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் முக்கால் பவுன் தாலிச் செயினைப் பறித்துச் சென்றனா்.
முசிறி அருகேயுள்ள சேந்தாமாங்குடி பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மனைவி துளசி (50). வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது வீடு புகுந்த இரு மா்ம நபா்கள் கத்தி முனையில் அவா் அணிந்திருந்த முக்கால் பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றனா். இது குறித்து முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.