திருச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நபிகள்நாயகத்தை அவதூறாகப் பேசிய பாஜகவைச் சோ்ந்த நுபுா்சா்மா, நவீன் ஜின்டால் ஆகியோரைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி தமுமுக சாா்பில், திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து அனுமதியின்றி கூட்டத்தைச் சோ்த்ததாகவும், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகவும் தமுமுக மாவட்டத் தலைவா் முகமதுராஜா உள்பட 300 போ் மீது காந்திச்சந்தை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.