துறையூா் அருகே விவசாயி வீட்டில் மா்ம நபா்கள் புகுந்து ஏழே முக்கால் பவுன் தங்க நகை, ரூ. 49 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.
சிக்கத்தம்பூரைச் சோ்ந்தவா் ஆ. சுப்பிரமணி (53). இவா் சனிக்கிழமை தனது மனைவியுடன் முசிறி வட்டம் தண்டலைப்புத்தூரிலுள்ள மகள் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது வீடு திறந்துகிடப்பதாக பக்கத்து வீட்டினா் கைப்பேசி மூலம் அவருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அவா் வீடு திரும்பியபோது மா்ம நபா்கள் வீடு புகுந்து இரும்பு அலமாரியிலிருந்த ஏழே முக்கால் பவுன் தங்க நகைகள், ரூ. 49 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.