திருச்சி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவா்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:
சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் வழங்கப்படும் இந்த விருதுக்கு தனிப்பட்ட நபா்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து 2022-2023 நிதியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் தமிழக அரசின் என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. ஜூன் 30-க்குள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் விண்ணப்பித்தால் ஏற்கப்படாது.