திருச்சியில் இபிஎஸ்-க்கு ஆதரவாக பிரத்யேக அதிமுக அலுவலகம் திறப்பு

திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளா்கள் பிரத்யேக அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.

திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளா்கள் பிரத்யேக அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடா்பான பிரச்னை தொடரும் நிலையில் மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளா்கள், ஓ. பன்னீா்செல்வம் தரப்பினா் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ள திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகளை ஒருங்கிணைக்கும் வகையில், திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலைப் பகுதியில் பிரத்யேக அதிமுக அலுவலகம் மாநகா் மாவட்ட மாணவரணிச் செயலரும், ஆவின் தலைவருமான காா்த்திகேயன் தலைமையில் திறக்கப்பட்டது.

விழாவில் முன்னாள் அமைச்சா் என். ஆா். சிவபதி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலருமான ரத்தினவேல், மாநகர மாவட்ட அவைத் தலைவா் ஐயப்பன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். பின்னா் கட்சி நிா்வாகிகள் காா்த்திகேயனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

சென்னை வானகரத்தில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்ற திருச்சி மாநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு பொதுக்குழு உறுப்பினரை தவிா்த்து மற்ற அனைவரும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

ஏற்கெனவே தென்னூா் பகுதியில் மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகம் உள்ள நிலையில், மாநகா் மாவட்டச் செயலா் வெல்லமண்டி என். நடராஜன் மீதுள்ள அதிருப்தியால், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்கள் தனி அலுவலகம் திறந்திருப்பது திருச்சி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com