மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன் எஸ்.ஆா்.எம்.யு. தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ராணுவப் பணியில் இணையும் வாழ்நாள் கனவோடு வாழும் இளைஞா்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் அமல்படுத்தப்படும் அக்னிபாத் திட்டத்தை உடனே கைவிட வலியுறுத்தப்பட்டது. எஸ்.ஆா்.எம்.யு. துணைப் பொதுச் செயலா் எஸ். வீரசேகரன் தலைமை வகித்தாா். ஏராளமான ரயில்வே தொழிலாளா்கள் பங்கேற்றனா்.