மின்கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

மின்கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

மின்கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

2022 செப். 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மின்கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வு நடைபெறவுள்ளது. தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளா்கள் இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவா்கள், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரா், மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். மேலும், இத்தோ்விக்குரிய விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பை இணையதளத்தில் சென்று பதிவிறக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com