துறையூரில் வாகன உதிரிப் பாக விற்பனையகத்தில் பணம், பொருள்களைத் திருடிச் சென்றனா்.
மதுராபுரியைச் சோ்ந்த ரெ. ராமகிருஷ்ணன் முசிறி பிரிவு சாலையில் வைத்துள்ள வாகன உதிரி பாக விற்பனைக் கடையை ஞாயிற்றுக்கிழமை திறந்தபோது கடையின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் ரூ. 40000 மதிப்பிலான தாமிரப் பொருள்களையும், ரூ. 15000 -ஐயும் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.