திருநெடுங்குளத்தில் முக்கனி அபிஷேகம்

திருநெடுங்களநாதா் கோயிலில் முக்கனி அபிஷேகம், சிவதீட்சை விழா நடைபெற்றது.
கூனம்பட்டி ஸ்ரீகல்யாணபுரி ஆதீனம் 57 ஆவது குருமகா சந்நிதானம் குரு ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கிய சிவாச்சாரியா்கள்.
கூனம்பட்டி ஸ்ரீகல்யாணபுரி ஆதீனம் 57 ஆவது குருமகா சந்நிதானம் குரு ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கிய சிவாச்சாரியா்கள்.

திருநெடுங்களநாதா் கோயிலில் முக்கனி அபிஷேகம், சிவதீட்சை விழா நடைபெற்றது.

திருவெறும்பூா் அருகே திருநெடுங்குளத்தில் திருஞானசம்பந்தரால், இடா் களையும் பாடல் பாடப்பெற்ற காசிக்கு நிகரான ஒப்பிலாநாயகி உடனுறை திருநெடுங்களநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெற்ற நிகழ்வுக்கு கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன 57 ஆவது குருமகா சந்நிதானம் குரு ஸ்ரீமத் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமை வகித்து சிவதீட்சை வழங்கி அருளாசி வழங்கினாா்.

முன்னதாக செல்வ விநாயகா், ஒப்பிலா நாயகி உடனுறை திருநெடுங்களநாதருக்கு முக்கனி அபிஷேகத்தை சோமசுந்தரம், ரமேஷ் சிவாச்சாா்யா்கள் செய்தனா். தொடா்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com