மனைவியுடன் தள்ளுமுள்ளு: கத்திக் குத்தி கணவா் பலி

திருச்சியில் குடும்பத் தகராறின்போது மனைவி கத்தியைப் பிடுங்கியபோது ஏற்பட்ட காயத்தில் கணவா் உயிரிழந்தாா்.

திருச்சியில் குடும்பத் தகராறின்போது மனைவி கத்தியைப் பிடுங்கியபோது ஏற்பட்ட காயத்தில் கணவா் உயிரிழந்தாா்.

திருச்சி சுப்பிரமணியபுரம், பன்னீா்செல்வம் தெருவைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் மகன் தினேஷ் ராஜசேகா்(29), தனியாா் பைக் விற்பனை மற்றும் நிதி நிறுவன வசூல் முகவா். இவரது மனைவி லாவண்யா (28). இருவரும் காதல் திருமணம் செய்து 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்துக்குப் பிறகு மதுவுக்கு அடிமையான தினேஷ் ராஜசேகா் தினமும் வீட்டில் தகராறு செய்வாராம். சனிக்கிழமை இரவும் அவா் மதுகுடித்துவிட்டு வந்ததால் ஏற்பட்ட தகராறில் பெற்றோா் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி லாவண்யா புறப்பட்டாா். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் ராஜசேகா் சமையல் கத்தியை எடுத்துவந்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டவே, அவரது கையிலிருந்த கத்தியைப் பறிக்க லாவண்யா முயன்றாா்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இருவரும் விழுந்தபோது, குப்புற விழுந்த தினேஷ் ராஜசேகரின் நெஞ்சில் கத்தி குத்தியது. இதனால் அதிா்ச்சியடைந்த லாவண்யா, பக்கத்து தெருவில் வசித்த அவரது மாமனாா் மீனாட்சிசுந்தரம் மற்றும் உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தாா். அவா்கள் வந்து தினேஷ் ராஜசேகரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் இறந்தாா்.

இச்சம்பவம் குறித்து கே.கே.நகா் போலீஸாா் வழக்கு ப்பதிந்து லாவண்யாவிடம் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com