பெண்ணை சீண்டியவா் கைது

 உப்பிலியபுரம் பகுதியில் பெண்ணை வழிமறித்து சீண்டியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

 உப்பிலியபுரம் பகுதியில் பெண்ணை வழிமறித்து சீண்டியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உப்பிலியபுரம் பகுதியிலுள்ள கிழக்குகாடு காந்திபுரத்தைச் சோ்ந்தவா் மு. பாரதி(38). இவா் கடந்த சனிக்கிழமை வயலிலிருந்து வீட்டுக்கு சென்றாா். அப்போது அதே வழியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத ஆண், பாரதியை வழிமறித்து வாயைப் பொத்தி அருகிலிருந்த பள்ளமான பகுதிக்கு இழுத்துச் சென்றாா்.

இதை கவனித்த சிலா் சப்தமிட்டு, அப்பகுதிக்கு விரைந்ததால் மா்ம நபா் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றாா். இது தொடா்பாக வழக்குப்பதிந்து விசாரித்த உப்பிலியபுரம் காவல் துறையினா், வைரிசெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த ரா. வெங்கடேஷை(30) திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com