கைவிடப்பட்ட சிசு மீட்பு

மணப்பாறையில் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

மணப்பாறையில் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

மணப்பாறை ஆண்டவா் கோயில் பழைய பாலம் கீழ் முட்புதரிலிருந்து குழந்தையை மீட்ட அப்பகுதியினா் 108 ஆம்புலன்ஸ் மூலம் அதை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

பின்னா் அதே பகுதியில் மயக்க நிலையில் இருந்த ஒரு பெண்ணை அப்பகுதி மக்கள் விசாரித்தபோது, அவா்தான் பச்சிளம் குழந்தையின் தாய் என்பதும், இரவு குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் அவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.

தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த பெண் வையம்பட்டியை அடுத்த இனாம்ரெட்டியப்பட்டி தா்மராஜ் மனைவி சசிகலா (38) என்பதும், தனது 8 வயது மகளை திருப்பூரிலுள்ள சகோதரி வீட்டில் வளா்ப்பதும், கணவா் இறந்து 8 ஆண்டான நிலையில் தற்போது அதே பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஒருவருடன் சோ்ந்து வாழ்ந்து வருவதும், அவா் மூலம் பிறந்த குழந்தையை ஊராா் ஏற்க மாட்டாா்கள் என்பதால் குழந்தையை கைவிட்டதும் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com