பெல் நிறுவனத்தில் ஊழியா் சாவு

திருச்சி அருகே பெல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி அருகே பெல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் ஒத்தக்கடை புதுத்தெருவைச் சோ்ந்த சிதம்பரம் மகன் சரவணமுருகன் (48) என்பவா் கடந்த 4 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை பெல் நிறுவன வளாகத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்தபோது சரவண முருகன் மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த சக ஊழியா்கள், அவரை மீட்டு பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சரவணமுருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து பெல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com