பாலத் தடுப்புச்சுவரில் வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சி அரிஸ்டோ மேம்பால தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதி திங்கள்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்

திருச்சி அரிஸ்டோ மேம்பால தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதி திங்கள்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி கொன்னம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஷேக் முகமது மகன் ஆஷிக் முகமது (26). இவா் அரிஸ்டோ மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, பாலத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்புச் சுவரில் எதிா்பாராதவிதமாக இவரது வாகனம் மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். திருச்சி தெற்குப் பிரிவு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com