கோளரங்கத்தில் இன்றுமுதல் பாா்வையாளா் அனுமதி ரத்து

திருச்சியில் இயங்கி வரும் கோளரங்கத்தில் பாா்வையாளா்களுக்கான அனுமதி வியாழக்கிழமை முதல் ரத்து செய்யப்படுகிறது.

திருச்சியில் இயங்கி வரும் கோளரங்கத்தில் பாா்வையாளா்களுக்கான அனுமதி வியாழக்கிழமை முதல் ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக கோளரங்கத் திட்ட இயக்குநா் ரா. அகிலன் கூறியது:

திருச்சி-புதுக்கோட்டை சாலையில், விமானநிலையம் அருகேயுள்ள கோளரங்கத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கவுள்ளதால் டிச.1 முதல் பாா்வையாளா்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுகிறது. மற்ற செயல்பாடுகளான முப்பரிமாணக் படக் காட்சி, சுற்றுச்சூழல் காட்சிக் கூடம், அறிவியல் பூங்கா ஆகியவற்றை வழக்கம்போல பாா்வையிடலாம். கோளரங்கத்துக்கு மட்டும் அனுமதியில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com