மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்பு போடுதல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான புதன்கிழமை விஜய தசமியை முன்னிட்டு ஞீலிவனேஸ்வரா் குதிரை வாகனத்திலும், விசாலாட்சி அம்மன் கேடயத்திலும் எழுந்தருளி கீழடி மண்டபம் மகுதியில் சிறப்பு பூஜைகளுக்கு அம்பு போடும் நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.