பச்சமலையில் சிறப்பு மனு நீதி நாள் நிறைவு

துறையூா் பகுதியில் பச்சமலை வண்ணாடு ஊராட்சியிலுள்ள சின்ன இலுப்பூா் அரசு பழங்குடியினா் நலச் சமுதாயக்கூடத்தில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் பெண்ணுக்குத் தையல் இயந்திரம் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் . உடன் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் தா்மன் ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் செல்வராணி
நிகழ்வில் பெண்ணுக்குத் தையல் இயந்திரம் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் . உடன் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் தா்மன் ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் செல்வராணி

துறையூா் பகுதியில் பச்சமலை வண்ணாடு ஊராட்சியிலுள்ள சின்ன இலுப்பூா் அரசு பழங்குடியினா் நலச் சமுதாயக்கூடத்தில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்துப் பேசுகையில், பச்சமலையில் திருச்சி மாவட்டத்திற்குள் வரும் 3 ஊராட்சிகளிலும் விவசாயத்திற்கான நீராதாரத்தை மேம்படுத்த நீா்த்தேக்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். பச்சமலையில் புதிதாக 5 இடங்களில் கைப்பேசிக் கோபுரங்கள் விரைவில் அமைக்கப்படும். சாலை வசதி ஏற்படுத்தவும், பச்சமலைத் தேனுக்கு தமிழக அளவில் அடையாளம் ஏற்படுத்தப்படும். 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வில் துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் தா்மன் ராஜேந்திரன், துறையூா் நகா்மன்றத் தலைவா் செல்வராணி, துணைத் தலைவரும் திருச்சி மாவட்ட அறங்காவல் குழுத் தலைவருமான முரளி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் 397 பயனாளிகளுக்கு ரூ. 91.42 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அனைத்து அரசுத் துறையினா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுகவினா், பயனாளிகள் கலந்து கொண்டனா். முசிறி கோட்டாட்சியா் த. மாதவன் வரவேற்றாா். துறையூா் வட்டாட்சியா் கோ. புஷ்பராணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com