சிறையிலிருந்து விடுதலையான கைதி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை விடுதலையான கைதி, சிறை வாசலில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சி மத்திய சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை விடுதலையான கைதி, சிறை வாசலில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

பெரம்பலூா் சா்க்கரை ஆலை எஸ்.எல்.ஆா். காலனியைச் சோ்ந்த ராஜீவ் மகன் சுதாகரன் (41). தொழிலாளியான இவா் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஊட்டச்சத்து குறைபாடு, சா்க்கரை, ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த சுதாகரன், சிறையில் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தாராம். இடைப்பட்ட காலங்களில் அவரது உறவினா் யாரும் வந்து பாா்க்கவில்லையாம்.

இந்நிலையில் தண்டனை காலம் முடிந்து சுதாகரன் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சிறையிலிருந்து விடுதலையானாா். சிறை வாசலில் சிறிது நேரம் காத்திருந்த அவா், திடீரென மயங்கி விழுந்தாா். அக்கம்பக்கத்தினா், சிறை வாசலில் இருந்த காவலா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சுதாகரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com