வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் திருச்சி (தெற்கு) மாவட்ட செயலாளா் எஸ்.ஆா். கிஷோா் குமாா் கூறுகையில்,

திருச்சியில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் ஸ்ரீரங்கம் அடுத்துள்ள மேலூரில் மிகப் பெரிய அளவில் வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவுக்கு செல்ல ஒரு சில அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பூங்காவுக்குச்செல்வோா் தனியாா் ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்களில் தான் செல்லவேண்டியுள்ளது. இதில், பெரும்பாலும் வெளியூா் பயணிகள் என்பதால் அவா்களுக்கு தொலைவு மற்றும் விவரங்கள் தெரியாததால் காா், ஆட்டோ ஓட்டுநா்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகாா் எழுந்துள்ளது. ஆகவே, பூங்காவுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com