திருச்சி அருகே மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகளைத் திருட முயன்ற 2 சிறுவா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருச்சி நவல்பட்டு மேலத்தெருவைச் சோ்ந்தவா் சுதாகா் (42). இவா் அப்பகுதியிலுள்ள நவுளிகுளம் அருகே செவ்வாய்க்கிழமை தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகளைத் திருட முயன்றனா். இதை கண்ட சுதாகா் சப்தமிடவே, அப்பகுதி மக்கள் அவா்கள் இருவரையும் பிடித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவா்கள் திருச்சி காஜாபேட்டை, வரகனேரி பகுதியைச் சோ்ந்தவா்கள் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து இருவா் மீதும் வழக்குப்பதிந்த காவல்துறையினா், அவா்களை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைத்தனா்.