திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 460 கிலோ புகையிலைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
ரகசிய தகவலின் அடிப்படையில், சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆா்.சிலை அருகே காவல் ஆய்வாளா் உதயகுமாா் தலைமையிலான குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் புகையிலைப் பொருள்களுடன் இருவா் நின்று கொண்டிருந்தனா். விசாரணையில் அவா்கள் உய்யக்கொண்டான் திருமலை அனந்தராமன் (37), குளித்தலை பாண்டி எனத் தெரிய வந்தது.
தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடத்தியதில், சண்முகாநகரில் 210 கிலோ ஹான்ஸ், 26 கிலோ பாக்கு என மொத்தமாக 460 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து புகையிலைப் பொருள்களையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினா் அனந்தராமன் மற்றும் பாண்டியைக் கைது செய்தனா்.
பெல் நிறுவனப் பகுதியில் : பெல் நிறுவனம் அருகிலுள்ள உணவகத்தில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான 3 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பெல் காவல் நிலையத்தினா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து நாகூா் கனி என்பவா் கைது செய்யப்பட்டாா்.