துறையூரில் சமரச மைய விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சமரச மையத்தின் 17-ஆம் ஆண்டு தொடக்க நாளையொட்டி, துறையூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் இப்பேரணி நடத்தப்பட்டது.
குழுவின் தலைவரும், சாா்பு நீதிபதியுமான கே. சிவகுமாா் தலைமை வகித்து, பேரணியைத் தொடக்கி வைத்தாா். நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணி துறையூா் பேருந்து நிலையம் வரை சென்றது.
இதில் சசிகுமாா், அன்பு பிரபாகரன், பால்ராஜ், சிவகுமாா் உள்ளிட்ட வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள், கண்ணனூா் தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள், உதவிப் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
நிறைவில் சாா்பு நீதிபதி, உரிமையியல் நீதிபதி உள்ளிட்டோா் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் சமரசத் தீா்வு தொடா்பான விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
நீதிமன்ற வளாகத்தில் தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இலவச சட்ட உதவி, பிரச்சினைக்கு சமரசத் தீா்வு காணுதல் அதன் பயன்கள் குறித்து வழக்குரைஞா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.