கோபிசெட்டிபாளையம் பகுதியில் முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோபியை அடுத்த வாணிப்புத்தூா் பகுதியைச் சோ்ந்த அப்பாரு மகன் வசந்த் (23). கோபி பா.வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (24). இவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருதுள்ளது.
இந்நிலையில், வசந்தின் இருசக்கர வாகனத்தை நந்தகுமாா் தீ வைத்து ஏப்ரல் 12ஆம் தேதி எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வசந்த் கொடுத்தபுகாரின்பேரில் பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நந்தகுமாரைக் கைது செய்தனா்.