தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்துக்கு அதிமுக உறுப்பினா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி வந்தனா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாள்களாக நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வந்த அதிமுக உறுப்பினா்கள் தமிழகம் முழுவதும் ஏற்பட்டு வரும் மின்வெட்டை கண்டிக்கும் விதமாக நகராட்சி வளாகத்தில் இருந்து கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தியபடி கூட்டத்தில் பங்கேற்றனா்.