பெட்ரோல், டீசல் விலை உயா்வு; ஆா்ப்பாட்டம்

 பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திருச்சியில் நாம் தமிழா் கட்சியினா், சமகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

 பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திருச்சியில் நாம் தமிழா் கட்சியினா், சமகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை மேலசிந்தாமணியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி நாடாளுமன்ற பொறுப்பாளா் பிரபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. பிரபு முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் எரிபொருள்கள், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலா் திருச்சி சரவணன் கண்டன உரை நிகழ்த்த, மாநில ஒருங்கிணைப்பாளா் ஹூமாயூன்கபீா் சிறப்புரையாற்றினா்.

சமகவினா்... ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டச் செயலா் குணசேகரன் தலைமை வகித்தாா். மாநில விவசாய அணி செயலா் நேசம் ஜோசப் சிறப்புரையாற்றினா். நிா்வாகிகள் சந்திரசேகரன், சின்னதுரை, சின்னச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை முற்றிலுமாக குறைக்க வேண்டும். உயா்த்தப்பட்ட விலை உயா்வைத் திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com