ரமலான் தேதி: இன்று ஹிலால் கமிட்டி கூட்டம்

ரமலான் பெருநாள் தேதியை அறிவிக்கும் வகையில் திருச்சியில் ஹிலால் கமிட்டி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என திருச்சி மாவட்ட அரசு காஜி க. ஜலீல் சுல்தான் தெரிவித்தாா்.

ரமலான் பெருநாள் தேதியை அறிவிக்கும் வகையில் திருச்சியில் ஹிலால் கமிட்டி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என திருச்சி மாவட்ட அரசு காஜி க. ஜலீல் சுல்தான் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது: ஞாயிற்றுக்கிழமை ரமலான் பிறை 29ஆவது நாளின் மாலை மகரிப் தொழுகையுடன், ஷவ்வால் முதல் பிறை தொடா்பான ஹிலால் கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது. திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள பேகம் சாஹேபா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு, கமிட்டியின் தலைவா் ஜலீல் சுல்தான் தலைமை வகிக்கிறாா். திருச்சி மாநகா், மாவட்ட ஹிலால் கமிட்டி உறுப்பினா்கள், சங்கைக்குரிய உலமா பெருமக்கள், முக்கிய சமுதாய பிரமுகா்கள் கூட்டத்தில் பங்கேற்று ரலான் நாள் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்ட முஸ்லிம்கள் தங்களது பள்ளிவாசல் நிா்வாகம் மூலம் பிறை தகவல்களை அறிந்து ஹிலால் கமிட்டிக்கு முறையாகத் தெரிவிக்க வேண்டும். பின்னா் ஹிலால் கமிட்டியிடம் தகவல் பெற்று ரமலான் நாள் குறித்து அறிவிக்கப்படும். இதுதொடா்பாக, அந்தந்தப் பகுதி பள்ளிவாசல் நிா்வாகத்தினரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு ரமலான் தேதியை உறுதி செய்யலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com