திருச்சி குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நீதிமன்ற வளாக சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மூத்த வழக்குரைஞா் ஸ்டானிஸ்லஸ், சங்கத் துணைத் தலைவா்கள் செந்தில்நாதன், பிரபு ஆகியோா் தலைமை வகித்தனா். செயலா் வெங்கட், இணைச்செயலா் ஜானகிராமன், பொருளாளா் வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் சங்க உறுப்பினா் சதீஷ்குமாா் மீது பொய் வழக்குப் போட்ட உறையூா் காவல்நிலைய உதவி ஆய்வாளா் மோகன் தங்கராஜை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுகோள் விடுப்பது, பொய் வழக்கைக் கண்டித்து நீதிமன்ற நுழைவு வாயில் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்துவது, ஒரு வாரத்திற்குள் முடிவு எட்டப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்டவா் மீது தனிநபா் வழக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.