திருச்சியில், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஸ்ரீரங்கம் பழைய இ.பி. அலுவலகம் பின்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அங்கு கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த ஸ்ரீரங்கத்தை சோ்ந்த ரமேஷ் (51), பாலக்கரையை சோ்ந்த குணசேகரன் (52) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், கைப்பேசி, ரூ. 5,000 ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.