திருச்சி மத்திய சிறைக்கு மகனை பாா்க்க கஞ்சாவுடன் வந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம் துறையூா் பெத்தபெருமாள் பட்டி வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி ஈஸ்வரி (50), சிறையிலுள்ள தனது மகன் அருண்குமாரை பாா்க்க வியாழக்கிழமை வந்தாா்.
அப்போது மத்திய சிறை வாா்டன் சண்முகசுந்தரம் அவரிடம் மேற்கொண்ட சோதனையில் ஈஸ்வரி கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தனது மகனுக்காக கஞ்சா கொண்டு வந்ததாக ஈஸ்வரி தெரிவித்தாராம். இதையடுத்து கேகே நகா் போலீஸாா் அவரைக் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.