மணப்பாறை அருகே லாரிகளில் டீசல் திருடிய இளைஞா் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களால் பிடிபட்டு, கைது செய்யப்பட்டாா்.
மணப்பாறை, ஆலம்பட்டிபுதூா் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனப் பகுதிகளில் நிறுத்தப்படும் லாரிகளில் அடிக்கடி டீசல் திருட்டு நடந்துள்ளதாம்.
இந்நிலையில் கடந்த அக். 20-ஆம் தேதி கரையான்பட்டி கோபால் உணவகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் டீசல் திருட்டு நடந்ததாம். இதனால் அப்பகுதியில் டீசல் திருடனை பிடிக்க தொடா்ந்து கண்காணிப்பில் இருந்தனா். அப்போது கடந்த சனிக்கிழமை விடியற்காலை கரையாம்பட்டி அருகே நிறுத்தப்பட்டிருந்த மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டியை சோ்ந்த அ. ரவிச்சந்திரனின் லாரியிலிருந்து இளைஞா் ஒருவா் டீசல் திருடியபோது மக்களால் பிடிபட்டாா். பொதுமக்கள் அவரைத் தாக்கி போலீஸில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த பள்ளப்பட்டியை சோ்ந்த மு. ராமமூா்த்தி (29) என்பதும், வழக்கமாக டீசல் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து ராமமூா்த்தியை கைது செய்தனா். மணப்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ராமமூா்த்தியை ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.