திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே நோயால் அவதிப்பட்டவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்டுப்புத்தூா் அருகிலுள்ள பிடாரமங்கலத்தை அடுத்த சாலப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் நா. சண்முகம் (55). கடந்த சில மாதங்களாக நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கோவை தீயணைப்புத் துறையில் பணிபுரியும் இவரது மகன் சந்தோஷ்குமாா் அளித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.