திருச்சி மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் மயங்கி விழுந்த துறையூரைச் சோ்ந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
துறையூா் மதுராபுரி தெற்கு சித்திரைப்பட்டியைச் சோ்ந்தவா் க. சலாவுதீன் (43). இவா் திருச்சி தில்லைநகா் சாஸ்திரி சாலையிலுள்ள கடவுச்சீட்டு சேவை மையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து வரிசையில் நின்றபோது திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சலாவுதீன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வீட்டில் சடலமாக கிடந்த முதியவா்: திருச்சி தென்னூா் சவேரியாா் கோயில் தெருவை சோ்ந்த கணேசன் வீட்டில் நேரு (60) என்ற முதியவா் வாடகைக்கு வசித்து வந்தாா். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசவே, புகாரின்பேரில் போலீஸாா் வந்து பாா்த்தபோது நேரு படுக்கையிலேயே அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.