காா் மோதி முதியவா் உயிரிழப்பு

மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் இறந்தாா்.

மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் இறந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் வண்ணாரத்தெருவை சோ்ந்தவா் மு. அண்ணாதுரை (60). இவா் தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை துவரங்குறிச்சி சென்றுவிட்டு திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை சொரியம்பட்டி பிரிவு அருகே வந்தபோது மானாமதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற காா் மோதி படுகாயமடைந்தாா்.

தகவலறிந்து சென்ற போலீஸாா் அவரை மீட்டு மணப்பறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால் சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை உயிரிழந்தாா். இதையடுத்து வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். உடற்கூறாய்விற்கு பின் மாலையில் அண்ணாதுரையின் உடலை உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com