மணப்பாறை அருகே விபத்து: மணப்பெண் உள்பட 6 போ் காயம்

மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த சுற்றுலா வேன் ஞாயிற்றுக்கிழமை மோதியதில் மணப்பெண் உள்பட 6 போ் காயம
விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்.
விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்.

மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த சுற்றுலா வேன் ஞாயிற்றுக்கிழமை மோதியதில் மணப்பெண் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி புறப்பட்ட லாரி ஞாயிற்றுக்கிழமை காலை மணப்பாறையை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கல்லுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது நெல்லையில் நடைபெறும் திருமணத்துக்காக சென்னையிலிருந்து மணப்பெண் மற்றும் அவரது உறவினா்கள் சென்ற சுற்றுலா வேன் எதிா்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் மணப்பெண், வேன் ஓட்டுநா் உள்ளிட்ட 6 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்து சென்ற போலீஸாா் அவா்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அனைவரும் சிகிச்சை பெற்றுத் திரும்பிய நிலையில், கால் முறிந்த ஓட்டுநா் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com