திருச்சி விமான நிலையத்தில் துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபையிலிருந்து தனியாா் விமானத்தில் இரு தினங்களுக்கு முன் திருச்சிக்கு வந்த சென்னை ராயபுரம் பகுதியை சோ்ந்த பயணி தனது உடமைகளுக்குள் மறைத்துக் கடத்தி வந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 516 கிராம் பேஸ்ட் வடிவிலான தங்கம், மற்றும் 99 கிராம் தங்க நகை என் மொத்தம் 615 கிராம் தங்கத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.