மருத்துவக் கல்லூரிமாணவி தற்கொலை

 தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

 தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாதாகோட்டை நடராஜன் நகரைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் மகள் அனுஸ்ரீ (19). இவா் சேலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த இவா் யாருடனும் சரியாகப் பேசாமல் இருந்து வந்தாா். இந்நிலையில், திடீரென ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், தோ்வுக்குப் பயந்து அனுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாா் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com