வழக்கில் ஆஜராகாமல்வெளிநாடு தப்பியோடியபுதுகை தொழிலாளி கைது

குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வெளிநாடு தப்பியோடிய புதுக்கோட்டை தொழிலாளி, திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வெளிநாடு தப்பியோடிய புதுக்கோட்டை தொழிலாளி, திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவூடையாா்கோவில் அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் தினேஷ்(35). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2017-ஆம் ஆண்டில் கொலை முயற்சி மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளின் கீழ் கணேஷ்நகா் காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டாா்.

பின்னா் பிணையில் வெளியே வந்த தினேஷ், வழக்குத் தொடா்பான நீதிமன்ற நடவடிக்கையில் ஆஜராகாமல் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றாா். இதையடுத்து புதுக்கோட்டை காவல்துறை, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த தினேஷை குடியேற்றப்பிரிவு அலுவலா்கள்

கைது செய்து, விமானநிலையக் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து திருச்சி வந்த புதுக்கோட்டை காவல்துறையினா்,

அவரை வேனில் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com