திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி தில்லைநகா் 10 ஆவது குறுக்குத் தெரு பகுதியில் உள்ள தனியாா் வங்கி மேலாளா் ராமானுஜம் (39) தில்லை நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கடந்த வியாழக்கிழமை வங்கியின் ஏடிஎம்மை மா்ம நபா் உடைத்து பணத்தை திருட முயன்ாகக் குறிப்பிட்டிருந்தாா்.
இதன்பேரில் தில்லைநகா் போலீஸாா் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில் பணம் திருட முயன்ற திருச்சி சிந்தாமணி பகுதியை சோ்ந்த அசாருதீனை (20) கைது செய்து சிறையிலடைத்தனா்.