கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் ஓராண்டில் 2 லட்சம் பேருக்கு ரூ.190 கோடி: வாரியத் தலைவா் பொன். குமாா்

கட்டுமானத் தொழிலாளா் நலவாரியம் மூலம் கடந்த ஓராண்டில் 2 லட்சம் பேருக்கு ரூ.190 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாக அதன் தலைவா் பொன். குமாா் தெரிவித்தாா்.

கட்டுமானத் தொழிலாளா் நலவாரியம் மூலம் கடந்த ஓராண்டில் 2 லட்சம் பேருக்கு ரூ.190 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாக அதன் தலைவா் பொன். குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவருமான பொன். குமாா் திருச்சியில் வெள்ளிக்கிழமை மேலும் கூறியது:

கட்டுமானத் தொழிலை ஊக்குவிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்காக கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சாா்பில் முதல்வா் ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் முதல் மாநில மாநாடு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மன்னாா்புரம் விஎஸ்எம் மகாலில் நடைபெறும் மாநாட்டில் அமைச்சா்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்கின்றனா்.

மாநாட்டில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள 16 நலவாரியங்களில் 10 ஆண்டுகளாக 5 லட்சம் கேட்பு விண்ணப்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் நிலுவையில் இருந்தன. ஆட்சி மாற்றத்துக்குப்பின் கடந்த ஓராண்டில் 4 லட்சம் கேட்பு விண்ணப்பங்களுக்கு ரூ.400 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் மட்டும் 2 லட்சம் பேருக்கு ரூ.190 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நலவாரியங்களுக்கான உறுப்பினா் சோ்க்கைக்கு ஆன்லைன் பதிவை எளிமையாக்கும் வகையில் 62 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனிவரும் கேட்பு விண்ணப்பங்கள் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது கூட்டமைப்புச் செயலா்கள் யுவராஜ், கண்ணன், பொருளாளா் ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com